Sunday, February 15, 2009

காதலர் தினம்!

இருபது வருஷத்துக்கு முன்னால் இந்த தினம் அவ்வளவு பிரபலமாகக் கொண்டாடப் பட்டதில்லை. வர்த்தக நிறுவனங்கள் தான் இதை பிரமாதமாக பிரபலப் படுத்திவிட்டன. இருந்தாலும் இது கிராமத்துப் பக்கம் இன்னும் போகவில்லை.
இதன் அடிப்படை தத்துவம் குடும்பம் என்ற அலகை முன்னிறுத்தும் சமுதாயத்துக்கு எதிரானது.
காதல் என்பது நான் பார்த்த அளவில் மார்வாடிக் கடையில் வாங்கும் தங்க நகையைப் போன்றது. அந்த மார்வாடியும் வாங்கின நபரும் தவிர மற்றவர்கள் அதை தங்கம் என்று லேசில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ரசீதை தொலைத்துவிட்டால் விற்ற மார்வாடி கூட ஒப்புக் கொள்ளமாட்டான். பல தடவை உரசி உரசி பார்ப்பார்கள். அது போல காதலர்கள் மட்டுமே அதைக் காதல் என்று சொல்வார்கள். மற்றவர்கள் "அதுக்கு அலையுதுங்க, பாரு" என்று தான் சொல்வார்கள். நாங்கள் ஒரு மாநில அமைப்பின் உள்ளூர் கிளை பொறுப்பாளர்களாக இருந்தோம். அப்போது நாங்கள் சில உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்துக் கொண்டு தீர்வு செய்தோம். அவற்றில் சில காதல் திருமணங்களும் உண்டு. அதைப் பற்றி அடுத்த அஞ்சலில் பார்ப்போம்.

1 Comments:

At February 16, 2009 at 6:53 AM , Blogger viji said...

Arumai,unga kathalar thina thaipatriya karuthu, yen 2 masama blog le onnum anuppa kanom.
nereya yeyudhungal,
viji

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home