Tuesday, February 17, 2009

முப்பதைக் கடந்த காதல்!

சேகர் மாலதி இரண்டு பேரும் ஒரே அலுவலகம். வயது இருவருக்கும் முப்பதுக்கு மேல். சேகர் செட்டியார் ஜாதி. என்ன செட்டியார் என்று கேட்காதீர்கள். நம் தமிழ் நாட்டிலே கல்யாணம் என்றால் ஒரு ஜாதி. கலப்பு திருமணம் என்றால் ஒரு ஜாதி. அரசாங்கத்தில் ஜாதி சான்று வாங்க வேண்டும் என்றால் அப்போது வேறு ஜாதி. மாலதி முதலியார். அப்புறம் என்ன பிராப்ளம்? திருமணம் செய்து கொள்ள வேண்டியதுதானே ! பெண் அவளது குடும்பத்தில் மூத்தவள். தாயார் கொஞ்சம் வாய் அதிகம். அவரது சொந்த ஊரிலே பக்கத்து வீட்டில் ஒரு காண்டிராக்டர். அவரது பெண் வன்னிய ஜாதி பையனுடன் கொஞ்ச காலம் பழகிவிட்டு, பெரிய பிரச்சினை ஆகி ஒரு வழியாக சொந்த ஜாதியிலேயே திருமணம் ஆனது. இடையில் பல பிரச்சினைகள் ஏற்பட்டது அல்லவா? அதற்க்கு மாலதியின் அம்மா தான் காரணம். மாலதிக்கு நான்கு தங்கைகள். இவர்கள் அயிந்து பேருக்கும் 12 வயதிலேயே தலை நரைத்து விடும். ஏதோ பரம்பரை வியாதியாம். இதுகளுக்கு எப்படி கலியாணம் பண்ணப் போறா நான் பார்க்கிறேன் என்று காண்டிராக்டர் சபதம் போட்டு சதி வேலை பல செய்து வந்தார். இந்த வேதனை தாங்காமல் மாலதி அப்பா வேற மண்டையப் போட்டு விட்டார். மாலதிக்கு ஜாதி விட்டு கலியாணம் நடந்தால் மற்ற பெண்கள் கதி என்ன? காண்டிராக்டர் முதலியார் சும்மா இருப்பாரா? உடனடியாக மாலதிக்கு அடுத்த இரண்டு பெண்களுக்கும் மாப்பிள்ளை பார்த்து தயார் செய்து விட்டு, மாலதிக்கு பதிவுத் திருமணம் செய்வது என்று தீர்மானம் செய்து ஆறு மாத காலத்தில் அனைத்தும் முடிந்தது. அடியேன் தான் solemnization. இதற்கெல்லாம் இந்த அமைப்பின் நண்பர்கள் மிகவும் பாடுபட்டனர். சேகர் - மாலதி திருமண வாழ்க்கை மிகவும் இனிமையாக போய்க்கொண்டு இருக்கிறது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home