Saturday, July 18, 2009

ஜோஸ்யம், ஜாதகம்!

என்னுடைய அப்பா அமெச்சூர் ஜோஸ்யர். சித்தப்பாவும் அதே போல. அப்பா, நான் சின்ன பையனாக இருக்கும் போதே காலமாகி விட்டார். சித்தப்பாவோடு சில நாட்கள் தங்கி இருக்கும்போது ஜோஸ்ய சாஸ்திரம் பற்றி கேட்டேன். அவர் பாம்பு பஞ்சாங்கத்தை நன்றாக படி. சந்தேகம் வந்தால் என்னைக் கேள் என்று சொன்னார். நான்கு நாட்கள் அதே வேலையாக அதை படித்தேன். அ) பூமியை சூரியன் சுற்றுவதாக இருக்கிறது. ஆ) நட்சத்திரத்துக்கும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம் ஆனபூமியின் உப கிரகமான சந்திரனுக்கும் எப்படி தொடர்பு இருக்க முடியும். இந்த இரண்டு கேள்விக்கு மட்டும் சயின்ஸை தூர வைத்துவிட்டு மற்ற கணக்குகளை பார் என்று சொன்னார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home