ஜோஸ்யம்..
வேறு சிலர் நியுமராலஜி, நேமாலஜி என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள். நமது பாரத நாட்டில் தான் முதலில் பூஜ்யம் கண்டு பிடிக்கப்பட்டது. பிறகு பல ஆண்டுகள் கழித்துதான் ஐரோப்பிய நாடுகளில் அது பயன் படுத்தப்பட்டது. அதனால் அவர்கள் ௨000-ஆவது ஆண்டை இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டு துவக்கம் என்று சொல்கிறார்கள். நமது நாட்டில் 0 முதல் 9 வரை அனைத்திற்கும் மதிப்பும் மரியாதையும் உண்டு. கெட்ட எண் துரதிர்ஷ்டம் பிடித்த எண் என்று எதுவும் கிடையாது. என்னும் எழுதும் கண் எனத் தகும் என்பது நமது நாட்டு பழமொழி. ஆங்கில எழுத்துக்கு ஒரு இலக்கம் கொடுத்து பிறகு அதனை வலமிருந்து இடமாக கூடுகிறார்கள். அதாவது 438 என்று வந்தால் 4+3+8 என்று கூட்டி வரும் 15 -ஐயும் கூட்டி ஆறு என்று சொல்கிறார்கள். ஏன் அப்படி கூட்டவேண்டும் என்றால் சரியான பதில் கூற மாட்டார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் 13 கெட்ட எண் என்றும் அந்த எண் கொண்ட வாகனங்களில் ஏற்பட்ட விபத்துகள் அந்த தேதியில் நடந்த கெட்டதுகள் அந்த மணி நிமிடத்தில் நடந்தவை என்று ஒரு புத்தகமே எழுதி இருக்கிறார்கள். ஆராய்ந்து paarthaal எல்லா எண் களுக்குமே அது போல சொல்ல இயலும்.
அதை விட அறிவுக்கு சற்றும் பொருந்தாது நேமாலஜி. பெயரில் உள்ள எழுத்துக்களை இப்படி அப்படி மாற்றச் சொல்லி அதற்கு பணம் வாங்குகிறார்கள்.
இவைகளைஎல்லாம் நம்பி ஒரு பயனும் கிடையாது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home